ஸ்நேக ஸ்பரிசம்
என் அதிகாலை துயிலொன்றின்
கதகதப்பு நீ ப்ரியமே-இனி
உனை போர்த்தபடியே
இந்த கனவுகள் தொடரட்டும்♥
இன்று காலைக்கோப்பி வேண்டாம்்
கிண்ணங்களில் நிரம்பும் ஸ்நேக ஸ்பரிசம் போதும்
ப்ரியமே
எப்போதும; ஓர் அசரீரி போலவே நீஆரம்பிக்கிறாய்
ஈற்றில் காதோரம் பெரும்கடலாய் நிறைந்து கொள்கிறாய்♥
காதல் இன்னும் ஊற்று அதில்
கரைந்து போவோம்
வேறு எப்படி கரையேறுவது♥♥♪♪
உன்
சிறு தடம் பற்றி இடம் சேருவேன்
உயிர் தவம் போல உனில் மீளுவேன்
குழல் நீயாகி இசை ஊறுவேன்_முதல்
பனிபோல உனை மூடுவேன்
இனி மொழி குழைந்தோடஉனை பேசுவேன்♥♥♪♪
அந்த நிர்மலப்பின்னிரவே
காதோரம் தேனடை பூசிடவா..♥
மெய் தழுவிய சிறுமூச்சே
உயிர்க் காட்டில் ஸ்நேகங்கள் மூட்டியே வா♪
பேரன்பே
மற்றொரு மழைக்கொத்தாய் என்வானம் இறங்கினாய்்்்
ப்ரியமே!!!!!
இம் மழைவெளியில் வடியும்
உன் நுனி விரல் துளிகளில் வழுகுதல் அன்றி
பெருமோட்சம் ஏதுமுண்டோ♥♥
ஸ்பரிசங்கள் ஊற்றும் அத்துளிகளின்
கதகதப்பில்
என் ஜென்மம் உடைந்தொழுகமெதுவாய் மெதுவாய் கரையேனோ♪♪♪♪